முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத முதியவர் சுற்றி திரிந்து வருகிறார். கொஞ்சம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டது போல் தெரியும் இவர் இரவு பகல் பாராமல் நகர் முழுவதும் நான் போலீஸ்.. நான் போலீஸ்.. எவனும் இங்கே நிற்கக்கூடாது.. என்று இவர் அடிக்கடி கூறி வலம் வருவதால் இவரை பலரும் சிரிப்பு போலீஸ் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது சட்டையில் தேசிய எம்பலமான சிங்கம் பொறித்த (முத்திரை கொண்ட) ஒரு பேட்ஜ் அணிந்துக் கொண்டு 'நான் ஒரு அரசாங்க அதிகாரி' என
கூறி தற்பொழுது சுற்றி திறிந்து வருகிறார். இவருக்கு அந்த பேட்ஜ் எப்படி கிடைத்தது? போலீஸ் தவற விட்டதா? என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படங்கள் செய்திகள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை