மரம் தலையில் விழுந்து அரிசி வியாபாரி சாவு
Posted January 22, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சேர்ந்த அரிசி வியாபாரி வி.எஸ். நாடிமுத்து (56). இவர் புதன்கிழமை காலை அதே பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான காலியிடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஜேசிபி இயந்திரத்தால் அகற்றப்பட்ட மரம் நாடிமுத்து தலையில்
விழுந்ததாம்.
இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி தினமணி
0 comment(s) to... “மரம் தலையில் விழுந்து அரிசி வியாபாரி சாவு”