முத்துப்பேட்டையில் டீக்கடைக்குள் கார் புகுந்தது விபத்தில் 5 பேர் காயம்-( படங்கள் இணைப்பு)
Posted January 18, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
, முத்துப்பேட்டை அருகே டீ கடைக்குள் கார் புகுந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 3 கார்களில் ஊரிலிருந்;து புறப்பட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஒன்றாக 3 கார்களும் நேற்று மாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தது. அப்பொழுது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மில்லடி பஸ் ஸ்டான்ட் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை 3 கார்களும்
யார் முன்னாடி செல்வது? என்று போட்டி போட்டுக் கொண்டு சென்ற போது அருணகிரி என்பவர் ஓட்டி வந்த கார் திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பழணிவேல் என்பவரது டீ கடைக்குள் புகுந்து விபத்தானது. இதில் டீ கடை உரிமையாளர் பழணிவேல்(45), அதே கிராமத்தைச் சேர்ந்த காத்தான்(40), ராமசாமி(60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை அந்த பக்கம் சென்ற முத்துப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் நடராஜன் மீட்டு தனது காரில் ஏற்றிக் கொண்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மூவரையும் அனுப்பி வைத்தனர். இதில் காரில் வந்த ராமநாதபுரத்தைச் சோந்த தேவி(38), செல்வநாயகி(35) ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் கிராம மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள். அப்பொழுது விபத்து காரணமான காருடன் வந்த மற்றொரு காரை ஆத்திரம் அடைந்த மக்கள் அடித்து உடைத்து அதில் வந்தவர்களையும் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை

.

0 comment(s) to... “முத்துப்பேட்டையில் டீக்கடைக்குள் கார் புகுந்தது விபத்தில் 5 பேர் காயம்-( படங்கள் இணைப்பு) ”