
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்தவர் சேதுராமன் (55). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த சாமி (56) என்பவரும் நேற்று முன்தினம் காலை மல்லிப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை 10 மணிக்கு துறைமுகத்துக்கு வரவேண்டிய 2 மீனவர்களும்நேற்று மாலை 6
மணி வரை கரை திரும்பவில்லை. இதனால் காணாமல்போன விசைப்படகை தேடி 4 விசைப்படகுகளில் சக மீனவர்கள் சென்றனர். இதுபற்றி கடலோர காவல்துறைக்கும், மீன்வள துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.