அதிரை அருகே விவசாயி வீட்டில் ஐடி அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன், ரூ.1.60 லட்சம் கொள்ளை

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள   பளுக்காட்டை சேர்ந்த விவசாயி நாகராஜ் (46).இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் அடையாளம் தெரியாத 6 பேர், கையில் லத்தியுடன் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் நாகராஜை எழுப்பி நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள், உங்களது வீட்டை சோதனை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த
அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.1.60 லட்சத் தை எடுத்து கொண்டனர்.
பின்னர் தஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு செல்லலாம் வாருங்கள் என்று நாக ராஜை அழைத்து கொண்டு தாங்கள் வந்த காரில் 6 பேரும் சென்றனர். 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகுடி அருகே நாகராஜை இறக்கி விட்டுவிட்டு நாளை காலை தஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து கணக்குகளை சமர்ப்பித்து உங்களுடைய பணம், நகை களை பெற்று கொள்ள லாம் என்று கூறிவிட்டு காரில் தப்பி சென்றனர். அப் போது தான் ஏமாற்றப்பட்டது நாகராஜிக்கு தெரியவந்தது.
இதுபற்றி பேராவூரணி போலீசில் நேற்று நாகராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் அன்பழகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை அருகே விவசாயி வீட்டில் ஐடி அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன், ரூ.1.60 லட்சம் கொள்ளை”