தஞ்சை மாவட்டத்தில் 6.47 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டும் பணி துவக்கம்

Posted December 16, 2014 by Adiraivanavil in Labels:

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிகளை மாவட்ட வழங்கல் அலு வலர் குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தனர்.அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது: தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை 2015ம் ஆண்டுக்கு புதுப்பிக்கும் வகையில் 6 லட் சத்து 47 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் உள் தாள் ஒட்டும் பணி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,178 ரேஷன் கடை களில் நேற்று முதல் துவங்கியுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க முதல் நாள் 1 முதல் 100 வரையிலான ரேஷன் கார்டுகளுக்கும், அதன் பின்னர் 101 முதல் 200 வரையிலான ரேஷன் கார்டுகளுக்கும் என்று வரிசைப்படி உள்தாள்கள் ஒட்டப்படுகிறது. ஒதுக்கீடு செய்த தேதியில் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட வர இயலாதவர்கள் வசதிக்காக சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாமில் பங்குபெற்று உள்தாள்களை ஒட்டி கொள்ளலாம். ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் யாராவது ஒருவர் நேரில் வந்து ரேஷன் கடையில் கையொப்பமிட்டு உள்தாள் பெற்று ஒட்டி கொள்ள வேண்டும். உள்தாள் ஒட்டும்போது பொருட்களும் விநியோகம் செய்ய வேண்டும் என்ப தால் மாலை நேரங்களில் உள்தாள் ஒட்டப்படும் என்றார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் 6.47 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டும் பணி துவக்கம்”