பாக்கிஸ்தானில் உயிர் இழந்த மாணவர்களுக்கு முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா பள்ளி மாணவர்கள் அஞ்சலி!

Posted December 20, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உயிர் இழந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க
செயலாளர் செல்லத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார்கள். 
படம்செய்தி 
முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் நாட்டில் உயிர் இழந்த மாணவர்களுக்கு மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார்கள்.


படம் செய்தி நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை



0 comment(s) to... “பாக்கிஸ்தானில் உயிர் இழந்த மாணவர்களுக்கு முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா பள்ளி மாணவர்கள் அஞ்சலி!”