முத்துப்பேட்டை அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து சம்பா சாகுபடி. வாய்க்காலின் மறுபகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி.

Posted December 26, 2014 by Adiraivanavil in Labels:

 முத்துப்பேட்டை தெற்கு காடு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. தற்பொழுது அப்பகுதியில் சம்பா பயிற்கள் சாகுபடி செய்து உள்ளனர். இதில் கீழநம்மங்குறிச்சி சாலையில் பயிரிடப்பட்டிருக்கும் விளைச்ச நிலங்களுக்கு மங்களுர் பம்போஸ் வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்று வருகிறது. இந்த நிலையில் மங்களுர் முதல் தெற்கு காடு வழியாக கொவிலூர் பைப்பாஸ் வரை சென்று வடியும் இந்த பம்போஸ் வாய்க்காலை அப்பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் தங்களது பகுதியில் அடைத்து வைத்துக்கொண்டு அதன்மீது சாகுபடி செய்துள்ளனர். இதனால் ஆக்கிரமிக்கப்படாத வாய்க்கால் பகதியில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களுக்கு சிரமத்தை அளித்து வருகிறது. மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பாம்பு போன்ற விசப்பூச்சிக்கள் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை அச்சுருத்தி வருகிறது. பல பகுதிகளுக்கு இந்த ஆக்கிரமிப்பு மூலம் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக பாசன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 இது குறித்து அப்பகுதி ராஜகோபால் கூறுகையில்: பல வருடமாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். சில ஆண்டுகளாக இந்த பம்போஸ் வாய்க்காலை பலரும் ஆக்கிரமித்ததால் தண்ணீர் வடிய முடியாமல் நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார். 


அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் கூறுகையில்: விவசாயத்திற்கு தண்ணீரை தரும் ஒரு வாய்க்காலையே அ10க்கிரமித்து சாகுபடி செய்யும் மேசமான செயல் இங்குள்ளது. இதனை தடுத்தால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதரவாக போலீஸ் செயல்படுகிறது. சமீபத்தில் இந்த ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட என் மீது கடந்த 20-ம் தேதி போலீஸ் வழக்கு போட்டது. இதனைபாசன அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படம் செய்தி:
நிருபர்: மு.முகைதீன் பிச்சைமுத்துப்பேட்டை




0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து சம்பா சாகுபடி. வாய்க்காலின் மறுபகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி.”