பொதுமக்கள் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவேண்டும்: கலெக்டர் பேச்சு

Posted December 11, 2014 by Adiraivanavil in Labels:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி கலெக்டர் சுப்பையன் தலைமையில் தொடங்கியது. விழாவில் ஊரக மற்றும் சுய உதவிக்குழுக்கள், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து கலெக்டர் சுப்பையன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வங்கிகளின் புத்தாக்க
பயிற்சியானது வங்கியாளர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு கட்டங்களை தாண்டி சிறப்பு தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் சிறு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரம் எதிர்பார்க்கும் அளவிற்கு வளரவில்லை. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர செய்வதே. இதற்கு உறுதுணையாக இருக்கும் வங்கிகள் மூலம் தான் இதனை செயல்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வங்கிகடன் எளிதாக கிடைக்க செய்வது. இந்த கடன் மூலம் மகளிர் குழுக்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர்கள் பயன்பெறுவார்கள். சில வங்கிகள் கடன் கொடுப்பதை தவிர்க்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத குழுக்கள் இருந்தால், அவர்களிடமிருந்து கடனை திரும்ப பெற மாவட்ட நிர்வாகம் அனைத்து வழிகளிலும் உதவி செய்யும்.
ஒரு கிராமத்தை முன்னேறச்செய்வது வங்கிகளால் தான் முடியும். பொதுமக்கள் வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தை தற்காலிக நிவாரணமாகவே கருத வேண்டும். அதன் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொண்டு கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதனை நினைவில் வைத்து திருப்பி செலுத்தினால் தான் மீண்டும் மீண்டும் கடன் பெற முடியும். அதேபோல் வங்கிகளும் தேவையற்ற கேள்விகள் மற்றும் கடன் வாங்க வருபவர்களை அலைய விடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். வங்கியாளர்கள் கடவுளை போல் ஒருவரது வாழ்வினை மேம்படுத்த அவர்களால்தான் முடியும்.
ஏழை எளியயோருக்கு கடன் கொடுப்பதில் சிறிது நேரமாவது செலவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “பொதுமக்கள் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவேண்டும்: கலெக்டர் பேச்சு”