துபாயில் குவியும் சுற்றுலா பயணிகள் : முன்பதிவால் நிரம்பும் ஓட்டல்கள்

Posted December 19, 2014 by Adiraivanavil in Labels:


துபாய்: உலகம் முழுவதும் இருந்து துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் பல்வேறு கண்காட்சிகளை காண உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் துபாயில் குவிந்து வருகின்றனர். உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி சென்ற மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. ‘மிராக்கிள் கார்டன்‘ என்ற மலர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஷாப்பிங் திருவிழாவும் தொடங்க உள்ளது. உலகின் பெரிய ஷாப்பிங் மால், விளையாட்டு பூங்காக்கள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எண்ணற்ற இடங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. 

புத்தாண்டையொட்டி பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள் ‘பாம் ஜீமைரா‘ செயற்கை தீவு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கவுள்ளது. இதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். புத்தாண்டை முன்னிட்டு துபாயில் உள்ள ஓட்டல்களில் அறைகள் பெரும்பாலானவை உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளினால் முன் பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தெரிகிறது. சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் இந்தியர்களை அதிகம் கவர்ந்த சுற்றுலா தலங்களில் துபாய் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comment(s) to... “ துபாயில் குவியும் சுற்றுலா பயணிகள் : முன்பதிவால் நிரம்பும் ஓட்டல்கள்”