பட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
Posted September 03, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஓய்வுப் பெற்ற நடத்துநர் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்து 17 பவுன் நகைகள் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை, கரிக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் எஸ். அப்துல்ரகீம் (58). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்
கழக நடத்துநர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்துல்ரகீமும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் அலமாரியைத் திறந்து, அதிலிருந்த 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து அப்துல்ரகீம் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினமணி
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு”