அதிரை காதர்முகைதீன் கல்லூரியில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி

Posted September 11, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்னம் காதர் முகைதீன் கல்லூhயில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 23 கல்லூரி
மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகள் நாக்கவுட் முறையில் சடைபெற்றன. இறுதிப் போட்டியில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்லூரி அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது இரண்டாம் இடத்தை திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரி அணியும் மூன்றாம் இடத்தை கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி அணியும் நான்காம் இடத்தை தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி அணியும் பெற்றனர் வெற்றி பெற்ற அணிகளுக்கு காதர்முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஜலால் கோப்பைகளையும் சான்றிதல்களையும் வழங்கினார் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்விதுறை செயலாளர் முனைவர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆண்களுக்கான விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயரகுநாதன் பெண்களுக்காண விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மாகலெட்சுமி காதர்முகைதீன் கால்லூரி துணை முதல்வர் உதுமான்முகைதீன் மற்றும் பேரசிரிய பேராசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் முருகானந்தம் செய்திருந்தார்
                   படவிளக்கம்
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான கோ-கோ விளையாட்டுப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற செங்கமலத்தாயார் கல்லூரி அணியின் தலைவி பாரதி என்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் ஜலால் வெற்றிக்கோப்பை வழங்கினார். 





0 comment(s) to... “அதிரை காதர்முகைதீன் கல்லூரியில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி”