அதிரை அருகேராஜபக்சே – சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் சங்க கூட்டத்தில் முடிவு

Posted September 13, 2014 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள கடற்கரை கிராமங்களான சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் போன்ற பகுதிகளில் 200–க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இதன் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் மீன்பிடி துறைமுகம்
அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் போன்ற மீன்பிடி இறங்குதளம் சேதுபாவாசத்திரத்தில் அமைந்துள்ளது. சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவர் சங்க கூட்டம் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமையிலும், விஜயன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய முதல்–அமைச்சர் விடுத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும், மீனவர்களை இழிவுபடுத்தி பேசிய சுப்பிரமணியசுவாமிவை கண்டித்தும் சேதுபாவாசத்திரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


0 comment(s) to... “அதிரை அருகேராஜபக்சே – சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் சங்க கூட்டத்தில் முடிவு”