முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டு தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி

Posted September 22, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை, செப். 22–
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி 18–வது வார்டு கவுன்சிலராக இருந்த மதியழகன் இறந்ததை தொடர்ந்து அந்த வார்டுக்கு கடந்த 18–ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில்
திருமலையும், பாரதிய ஜனதா சார்பில் செந்தில் காந்தியும் போட்டியிட்டனர். சுயேட்சையாக செந்தில் களம் இறங்கினார்.மின்னணு வாக்கு பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 454 வாக்குகள் பதிவானது. இன்று காலை தேர்தல் அலுவலர் நாராயண மூர்த்தி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது.இதில் பாரதிய ஜனதா வேட்பாளர் செந்தில் காந்தி வெற்றி பெற்றார். அவருக்கு 232 வாக்குகள் கிடைத்தது. அ.தி.மு.க. வேட்பாளர் திருமலை 213 வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் செந்திலுக்கு 9 வாக்குகள் கிடைத்தது.வெற்றி பெற்ற பாரதிய ஜனதா வேட்பாளர் செந்தில் காந்திக்கு தேர்தல் அலுவலர் நாராயண மூர்த்தி வெற்றி சான்றிதழ் வழங்கினார். வெற்றியை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.news malaimalar


0 comment(s) to... “முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டு தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி”