அதிரை அருகே ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சம் திருட்டு

Posted September 25, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிரை அருகே உள்ள ஊராட்சித் தலைவரிடம் நூதன முறையில் ரூ. 3.99 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியம், அணைக்காடு ஊராட்சித் தலைவர் டி. சுதாதரன் (45).
இவர் புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை பெரிய தெருவில் மணிக்கூண்டு அருகிலுள்ள
தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று 2 காசோலைகளைக் கொடுத்து ரூ. 3.99 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் தரையில் கிடந்த மூன்று 10 ரூபாய் நோட்டுகளைக் காட்டி பணத்தை கீழே போட்டு விட்டுச் செல்கிறீர்களே என்று கூறினாராம். அதை எடுக்க சுதாதரன் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது மர்ம நபர் இரு சக்கர வாகனத்திலிருந்த ரூ. 3.99 லட்சம் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாராம்.
இதுகுறித்து சுதாதரன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினமணி


0 comment(s) to... “அதிரை அருகே ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சம் திருட்டு”