அதிராம்பட்டினம் அருகே கல்லூரி மாணவர் சாவு

Posted February 26, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் மகன் பாலாஜி (வயது 18) இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில் பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு படித்து
வந்தார். இவரது நண்பர் ஜெயமுருகன் (20) இவர் இருவரும் நேற்று (25ந் தேதி) மாலை கல்லூரியிலிருந்து பைக்கில் தம்பிக்கோட்டைக்கு சென்றனர். அப்போது எதிரே நிஜாம் (21) என்பவர் ஓட்டி வந்த டுவீலர் திருப்பத்தில் இடது புறம் திரும்பும்போது பாலாஜியின் பைக் மீது மோதியது. இதில் பாலாஜி ஜெயமுருகன் நிஜாம் 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
 படுகாயம் அடைந்த பாலாஜியை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று (25ந்தேதி) இரவு பரிதாபமாக செத்தார். ஜெயமுருகன் நிஜாம் இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருகின்றனர்.



0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே கல்லூரி மாணவர் சாவு”