அதிரையில் 4 பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்-பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு

Posted February 13, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம் பட்டினம், பிப். 13-
அதிராம்பட்டினம் பேரூராட்சி கூட்டத்தில் 4 பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தொிவித்து மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர்.தஞ்சை மாவட் டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி கூட்டம் நேற்று மாலை நடந் தது. தலைவர் அஸ்லம்(திமுக) தலைமை வகித்தார். இதில் துணை தலைவர் பிச்சை(அதிமுக) உள்பட 21 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பஸ் நிலைய கடைகள் ஏலம் விடுவது தொடர் பாகஏலத்தொகை நிர்ணயித்தல்,வாி, குளங்கள், மரங்கள் ஏலமிடு வது தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டது.
அப்போது 17வது வார்டு உறுப்பினர் ரபிக்கா(மனிதநேயக்கள்கட்சி), 19வது வார்டு சவுதா ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் பணிகள் நடக்கவில்லை. வார்டு பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேணடும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தொிவித்த மனித நேயமக்கள் கட்சி கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டம் தடைபட்டது.
இதே போல்
, அதிராம்பட்டினம் பஸ் நிலையபணிகளை முழுமையாக முடிந்த பின்கடைகளை ஏல மிடவேண்டும் என வலியுறுத்தி 10வது வார்டு சபுரன்ஜமீலா(காங்), 16வது வார்டு உம்மன் மர்கான் ஆகிய பெண் கவுன் சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தொிவித்து மனித மக்கள் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். உதவி இயக்குனர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாா ிகள் வரவேண்டும் என கூறி அவர்கள் கிழக்கு கடற்கரை சாலை யில் மறி யல் செய் த னர்.
தகவலறிந்த தாசில்தார் சேதுராமன், ஏஎஸ்சி அரவிந்த்மேனம் மற்றும் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட் டதால் 5மணி நேர போராட் டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட் டது.




0 comment(s) to... “அதிரையில் 4 பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்-பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு”