நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா.

Posted February 12, 2016 by Adiraivanavil in Labels:


பேராவூரணி பிப்ரவரி-12
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா சிறப்பு முகாம் வியாழன் அன்று நடைபெற்றது.
     பள்ளித் தலைமையாசியர் நா. பன்னீர்செல்வம் முகாமிற்கு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், ஆசிரியர் கே.நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  ஆர்.இராமநாதன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 
     பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ஏ.தெட்சணாமூர்த்தி, உதவித் தலைமையாசியர்கள் எம்.மணியரசன், சி.ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணதாசன், ஆசிரியர்கள் அடைக்கலமணி, ஜேசுராஜா, வருவாய்துறை அலுவலர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் கே.சோழபாண்டியன் நன்றி கூறினார்.
      தொடர்ந்து ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


0 comment(s) to... “நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா.”