காயங்களுடன் கிடந்த அரியவகை பறவை மீட்டு முத்துப்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

Posted February 26, 2016 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பிப்-26
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டித்தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இறக்கையில் காயங்களுடன் இரத்தம் சொட்டியப்படி அரியவகை பறவையான
ஊசிவால் சிறவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப்பக்கம் சென்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளர் நடராஜன் என்பவர் அந்த பறவையை மீட்டு உடனடியாக தனது மேலாளர் இளவரசன் உதவியுடன் காரில் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். பின்னர் அங்கு இருந்த வன காவலர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தனர். பின்னர் முத்துப்பேட்டை வனசரக அலுவலர் அயூப்கான் உத்தரவின் பேரில் காயம் அடைந்த ஊசிவால் சிறவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பகுதி சரணாலயத்தில் வனத்துறையினர் பறக்கவிட்டனர்.\

படம்செய்தி மு.முகைதீன் பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “காயங்களுடன் கிடந்த அரியவகை பறவை மீட்டு முத்துப்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு”