அதிரையில் வாகனம் மோதி மின்கம்பம் முறிந்தது; 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted February 03, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம், பிப் 03
அதிராம்பட்டினம் -  அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் காலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையின் இருந்த ஒரு மின்சார கம்பத்தில் மோதியது. இதில் அந்த மின் கம்பம், சாலையின் நடுவே சாய்ந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள், சாலையின் இருபக்கமும் நின்று வாகனங்களை செல்லவிடாமல் தடுத்தனர். இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய பணியாளர்கள்;. அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் சாலையின் சாய்ந்து நின்ற மின்கம்பத்தை அகற்றி சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனால் அதிராம்பட்டினம் டூ பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து  பேருந்துகள் அனைத்தும்  மாற்றுப் பாதையில் சென்றன. 








0 comment(s) to... “அதிரையில் வாகனம் மோதி மின்கம்பம் முறிந்தது; 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு”