இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்

Posted February 01, 2016 by Adiraivanavil in Labels:

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தை கள் பெற்று மகிழ்ச்சியை இன் னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ் ச்சி என்பது பணமோ, புகழோ , அழ கோ, படிப்போ, நல்ல குணமோ, வீர மோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலேஇன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்க ளும், “உனக்கு என்னப்பா நீ சுதந்தி ரப் பறவை, நான் குடும்பஸ்தன்” என்று சலிப்பு வசனம் பேசுகிறார் கள். இளம் பருவத்தினர் இருபால ரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர் மாறான கருத்துக்களே இருக் கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையா கவும், கவலையாக கருதும் எண் ணம் அவர்க ளிடம் உள் ளது.
லிவிங்-டுகெதர் :
திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் பலரும் கூட லிவிங்-டுகெதர்வாழ்க்கைக்கு சம்மதிக்கின்றனர். இத னால் குடும்பம் குறித்த சுமையில் லை, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரின் தேவைகளை மட்டும் நிறை வேற்றிக் கொண்டு தேவைப்ப டாவிட்டால் பிரிந்து விடலாம் என்ற சூழ்நிலைக்கு வந்து விட்டனர். இணை ந்து வாழ்தல் என்றா லே உட னே காமம் மட்டும் தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகா பட்சத்தில். இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்.. இது நிஜம்..
லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசு க்கும் அதே நபரோடு தொடர வே ண்டும் என்ற ஆவலில்தான் தொட ங்கு கின்றார்கள்.. விளை யாட்டு க்கல்ல. அதுமட்டுமல்ல 50 வயது க்கு மேலுள்ளவர்கள் , விவா கரத் தானவர்கள், துணையை இழந்த வர்கள், பல காரணத்துக்காக மேல் நாட்டில் இணைந்து வாழ்கின்ற னர் .
திருமணம் குறித்த ஆய்வுகள்
அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமண ம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறதுஎன்கிறது. இதேபோல் மனோரீதி யாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.
சர்வதேச நல அமைப்பான ஹூ (WHO ) வின் மனநலப் பிரிவு மற்றும் நியூ சிலாந்து பல்கலைக்கழகம் இணை ந்து இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வு க்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டு களாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியி டப்பட்டது. இதில் வெளியா ன சில முக்கிய தகவல்கள்
மனரீதியான நன்மைகள் :
திருமணம் செய்து கொள்வ தால் மனச்சோர்வு, கவலை மற்றும் மன நல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திரு மணம் செய்வத ற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச் சோர்வு அடைகி றார்கள். அதே நேரத்தில் திரு மணம் செய்து கொண்ட பிறகு பெண் களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலை களில் இருந் து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கி றது. பெண்கள் அதிகம் கல்வி அறி வு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக் கிறது. சிலரிடம் மட்டும் அதிகமி ருக்கிறது.
தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரே னும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புயலும் சீற்ற மும் இருக்கும் கடலிலே கப்பலோ ட்ட க்கூடிய மாலுமியே சிறந்த வன். இன்றைய இளைய தலைமுறை யினரும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இது அதிரை வானவில்,  இணையத்தின் பதிவு அல்ல‍


0 comment(s) to... “இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்”