அதிரை அருகே மீனவர் பேரவை செயலர் மீது தாக்குதல்-6 பேருக்கு வலை
Posted February 04, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
விசைப்படகு மீனவர் பேரவை மாநிலச்செயலாளரை தாக்கிய 6 பேரை போலீ சார் தேடி வருகின்றனர். அதிராம்பட்டினம் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தாஜூதீன் (54). விசைப்படகு மீனவர் பேரவை தமிழ் மாநில செயலாளர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கடற் படை அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த போது, 2 பேர் அவரை இரும்புக் கம்பியால் சரமாரிதாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சை தனி யார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகா ரின் பேரில் சேதுபாவா சத் தி ரம் இன்ஸ் பெக் டர் அன் ப ழ கன் 6 பேர் மீதும் கொலை முயற்சி வழக் குப் பதிவு செய்து அவர் களை வலை வீசி தேடி வரு கின் ற னர்.
0 comment(s) to... “அதிரை அருகே மீனவர் பேரவை செயலர் மீது தாக்குதல்-6 பேருக்கு வலை”