சென்னை மின்சார ரயிலில் நேற்றிரவு திடிரென தீ விபத்து
Posted February 05, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
சென்னை கடற்கரையில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி மின்சார ரயில் நேற்று புறப்பட்ட போது, அடுத்த நிறுத்தமான கோட்டை ரயில் நிலையத்தை நெருங்கியதும் ரயிலிலின் 4வது பெட்டியில் தீ விபத்து நேரிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரசகால ஜெயினை பிடித்து இழுத்தனர். ரயில் நிறுத்தப்பட்டதும், பயணிகள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரயில் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான ரயில்கள் நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன.
0 comment(s) to... “சென்னை மின்சார ரயிலில் நேற்றிரவு திடிரென தீ விபத்து”