நடுக்கடலில் மீன் பிடித்த அதிராம்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை நடவடிக்கை
Posted February 26, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிராம்பட்டினம் மீனவர்களை படகில் இருந்த கயிற்றால் சரமாரி தாக்கினார்கள்.
இதில் மீனவர்கள் நாகூரான், சுரேஷ், சிவானந்தம் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மீனவர்கள் வைத்திருந்த வலைகள், மீன்களை பறித்து விரட்டியடித்து விட்டு இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர்.
பின்னர் மீனவர்கள் கரை திரும்பினார்கள். பலத்த காயம் அடைந்த 3 பேரும் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இது குறித்து கீழ தோட்டம் மீனவர்கள் சங்க தலைவர் பால்ராஜ் இந்திய கடலோர காவல் குழுமத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதிராம்பட்டினம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 comment(s) to... “நடுக்கடலில் மீன் பிடித்த அதிராம்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை நடவடிக்கை”