அதிரையில் கரையூர் சந்தன மாரியம்மன் கோவிலில் பால்குடம் -(அதிக படங்கள் இணைப்பு)
Posted May 21, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கரையூர் சந்தன மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந் திருவிழாவினை முன்னிட்டு திருவிழா நடைப்பெற்று வருகின்றன. கடந்த 6ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைப் பெற்றன. அன்றைய தினத்திலிருந்து மண்டகபடிகள் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சியும் நடைப்பெற்று வருகின்றன. இன்று சனி கிழமை உள்ளுர் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்தனர். காவடி பால்குடங்களை பக்கதர்கள் மன்னப்பன் நாயக்கன் குளத்திலிருந்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காக வேண்டி முக்கிய வீதி வழியாக வந்து. அம்மனுக்கு பால்குடமும், அபிஷேகமும் செய்திருந்தனர். இதில் ஏராளமானனோர் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்ப்பாடுகளை கரையூர் கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
0 comment(s) to... “அதிரையில் கரையூர் சந்தன மாரியம்மன் கோவிலில் பால்குடம் -(அதிக படங்கள் இணைப்பு)”