
அதிராம்பட்டினம் காந்தி நகர் கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயாமானர்.அதிராம்பட்டினம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியான காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ்;; மகன் ரவி வயது28.இவர் நேற்றைய முன்தினம் மதியம் 2 மணியளவில் காந்திநகர் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.இந்நிலையில் நேற்று அதிகாலை கரை திரும்பவேண்டியவர் நேற்று இரவு வரை கரைதிரும்பவில்லை. இதுதொடர்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் கடலோர காவல் நிலைய போலீசார்கள் மற்றும் சக மீனவர்கள் காணமால் போண மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுவுள்ளனர்.