அதிராம்பட்டினத்தில் கடல் சீற்றம்

Posted June 09, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் 4 வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த சில தினங்களாகவே கடலில் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இதைத்தொடர்ந்து அதிவேக சூரைக்காற்று தொடர்ந்து வீசிவந்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மற்றும் கரையில் மீன்பிடிக்கும் கட்டுமர மீனவர்கள் தவிர பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் 4 தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் கடும் கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் காணப்பட்டது.இது பற்றி மீனவர் கூறுகையில் கடலில் வழக்கத்தைவிட 3 மடங்கு அலைகள் எழும்புவதாலும் காற்றும் அதிகம் வீசுவதாலும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் கட்டுமர மீனவர்களும் கடலுக்குச செல்வது சந்தேகம்தான் என்று கூறினார்


                                         
அதிராம்பட்டினம் வெளிவயல் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் அலை எழும்போது எடுத்த படம்



0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கடல் சீற்றம்”