முத்துப்பேட்டை அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை

Posted September 14, 2016 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே வடக்கு உப்பூரை சேர்ந்தவர் நடராஜன் மகள் ரம்யா(வயது19). இவர் தாமரங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டில் இருக்கும்போது தனது வீட்டின் அருகில் உள்ள மாதவி என்பவரிடம் இருந்து செல்போனை வாங்கி அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ரம்யாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் செல்போனை வாங்கிதான் யாருடன் பேசினோம் என்பதை பெற்றோர் கண்டு பிடித்து விடுவார்களோ என்று அச்சமடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டுக்கொண்டார்.
அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரம்யா இன்று காலை இறந்தார். இந்நிலையில் மகள் தூக்குபோட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த நடராஜன் செல்போன் கொடுத்த மாதவி மற்றும் அவரது தந்தை சுரேசுடன் தகராறில் ஈடுபட்டார். இதை அவரது உறவினரான சாமிக்கண்ணு மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது ஆத்திரத்தில் இருந்த நடராஜன் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சுப்புலட்சுமி கவலைக் கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை”