அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Posted September 08, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் நகர இந்து முன்னனி சார்பில் 27-ம் ஆண்டு வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது முன்னதாக பிரதிஸ்டை செய்யப்பட்ட 30 வினாயகர் சிலைகள்; பட்டுக்கோட்டையிலிருந்து விஸ்வரூப வினாயகர் முதல்சேரி பள்ளிக்கோண்டான் சேண்டாக்கோட்டை மளியக்காடு நடுவிக்காடு புதுக்கோட்டைஉள்ளுர் வழியில் பழஞ்சூர் மழவேனிற்காடு வழியாக அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை வந்து அடைகிறது பின்னர் 4மணி அளவில் நடை பெற்ற கூட்டத்தில் அதிராம்பட்டினம் இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் நாக அருணாசலம் வரவேற்புரையாற்றினார் நகர இந்துமுன்னனி தலைவர் விஜயகுமார் ராஜா துணை நகர தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார் மாநில பேச்சாளர் காந்திமதி சிறப்புரையாற்றினார் பின்னர் ஊர்வலத்தை துவக்கிவைத்தனர் இந்த ஊர்வலம் சேர்மன்வாடி பழஞ்செட்டிதெரு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்துக்கு சென்று அங்கு வங்ககடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வினாயகர் சிலைகள் விசர்ஜனம்  செய்யபடுகிறது இந்த ஊர்வலத்தையேட்டி தஞ்சை மாவட்ட சரக டிஐஜி செந்தில்குமார் தலைமையில்  எஸ்;.பி மகேஷ் ஏஎஸ்பி அரவிந்த்மேனன் மற்றும் ஆயுதப்படையினர் ஊர்காவல்படையினர் உளவுத்துறை போலீஸர்கள் பாதுகாப்புபணியை மேற்கொண்டனர் ஊர்வலத்தில் முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்  
























0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் ”