அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல்
Posted August 26, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த இரண்டு படகுகளை கடலோர காவல் படை போலீஸார்கள் பறிமுதல் செய்தனர்.இரட்டை மடி,ரேஷ்மடி,சுருக்கு மடி, ஆகிய வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடள் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த வலைகளை மீனவர்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி கடலோர பாதுகாப்பு குழும ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் மேற்பார்வையில் தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டினம்,சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ்,சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன்,மீன்வளத்துறை ஆய்வாளர் கர்ணன் ஆகியோர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த இரண்டுபடகுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்தப்படகுகளையும் அதில் உள்ள வலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தப்படகுகள் மற்றும் வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டது

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார்கள்
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல்”