அதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர்

Posted October 28, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாலிபர் இந்து கலாச்சாரப்படி சீனப்பெண்ணுக்கு தாலி கட்டிய திருமண நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரது மகன் செந்துல்குமார் வயது (30) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணிபுரிந்து வந்த சீன நாட்டைச் சேர்ந்த சூகியோமின் சூயோங்நியா இவர்களின் மகள் சூயூலன் வயது (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து செந்துல்குமார மற்றும் சூயூலன் இருவரும் தன் பெற்றோரிடம் தங்களது காதலைத் தெரிவித்தனர். இருவரும் வீட்டிலும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் நேற்று முன் தினம் அதிராம்பட்டினத்தில் இவர்களின் திருமணம் வேத மந்திரங்களுடன் இந்து முறைப்படி நடைபெற்றது. இதைக்கான உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடி நின்று மணமக்களை வாழ்த்தினர். இது பற்றி மனமகள் சூயூலன் கூறுகையில் நானும் செந்தில்குமாரும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம் அவருடன் பழகியபோது அவர் இந்நியக்கலாச்சாரம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றியது என் மனதைக்கவர்ந்தது. எனவே இந்திய,தமிழ் கலாச்சாரப்படி வாழ வேண்டும் என்று அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தேன் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு எங்கள் இருவரின் பெற்றோரும் இதற்க்கு சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நடைபெற்றது என்று மிகப்பெரிய சந்தோசம் என்றார்



0 comment(s) to... “அதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர்”