அதிரை அருகே கொள்ளுக்காடு பஸ் ஸ்டாப் மீன் மார்க்கெட்டாக மாறியது ?
Posted October 15, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்- அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் பஸ் நிலையம் உள்ளது. அதன் அருகே காங்கிரட் கட்டிடத்தில். இருந்து பஸ் ஏறி பக்கத்தில் இருக்கும் மல்லிப்படடினம். கட்டுமாவடி. ராமேஸ்வரம் வரை பயணிகள் ஏறிச் சென்று வருகின்றனர். இங்கு ஏராளமான மீனவர்கள் நாடார்கள். கிருத்தவர்கள் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலுக்கு செல்பவர்களும். கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்களும். ஒன்றுக்கூடி கலந்து பேசி இந்த இடங்;களில் இருந்து செல்கின்றனர். இந்நிலையில் மாலை 4-மணிக்கு கொள்ளுக்காடு பஸ்; நிலையத்தில் திருவிழாவில் கலந்து கொள்வது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். இந் நிலையில் பஸ்;டாப்பில் நின்று பஸ் ஏற பயணிகள் முடியவில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இந்த பஸ்ஸ்;டாப்பில் மீன் விற்கும் பெண்கள் அமர்ந்து மீன்களை விற்று வருகின்றனர். . மீன்களில் மொய்க்கும் கொசுக்களால் அருகில் உள்ள சாப்பாடு கடையில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மீன்விற்பதால். வாகனம் ஓட்டுபவர்கள் மீன் விற்கும் பக்கம் திசை திருப்புவதால் கவனம் திசை மாறி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இந்த மீன் விற்கும் இடத்தை மாற்றி பொதுமக்கள் பயன்பெறும் பஸ் ஸ்;டாப்பாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

0 comment(s) to... “அதிரை அருகே கொள்ளுக்காடு பஸ் ஸ்டாப் மீன் மார்க்கெட்டாக மாறியது ?”