அதிரையில் முதலமைச்சர் நலம் பெற வேண்டி ஆயுல்ய ஹோமம் எம்.பி.எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.

Posted October 15, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகில் உள்ள நடுவிக்காடு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தங்களது நேர்த்திகடனை வேண்டி ஏராளமானனோர் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சென்னை அப்போலா மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சிறப்பு ஆயுல்ய ஹோமம் இக்கோவிலில் நடைப்பெற்றன. சிவாச்சாரிகள் மந்திரம் ஓத சாமி தரிசனம் நடைபெற்றன. இதில் ஆர்.வைத்திலிங்கம் (எம்.பி) தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர். கு.பரசுராமன், சட்டசபை உறுப்பினர்கள், சி.வி. சேகர் (பட்டுக்கோட்டை) மா.கோவிந்தராஜன் (பேராவூரணி), மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் பி.சுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை) துரை.செந்தில் (மதுக்கூர்) துரைமாணிக்கம் (பேராவூரணி), பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பி.என். இராமச்சந்திரன், பட்டுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் சரோஜாமலைய்யன், மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்ப்பாடுகளை பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன் (அதிமுக) செய்திருந்தார். இவ்விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டன.  


அதிராம்பட்டினம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம். 



0 comment(s) to... “அதிரையில் முதலமைச்சர் நலம் பெற வேண்டி ஆயுல்ய ஹோமம் எம்.பி.எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.”