அதிரையில் கல்லூரி மாணவி தற்கொலை-குடியரசு தினவிழாவில் சோகம்
Posted January 26, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர்.. இவரது மகள் சுலோச்சனா (18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.
மேலும் என்.சி.சி.யிலும் இருந்து வந்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.சி.சி. பயிற்சி நடைபெற்றது. இதனை சுலோச்சனா சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சீனியர் மாணவிகள் திட்டியதாக தெரிகிறது.
இது அவருக்கு மன வேதனையை அளித்தது. இன்று கல்லூரி விழாவுக்கு சென்ற அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வறையில் .தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி தற்கொலை சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comment(s) to... “அதிரையில் கல்லூரி மாணவி தற்கொலை-குடியரசு தினவிழாவில் சோகம்”