காந்தி நினைவு தினத்தையொட்டி முத்துப்பேட்டையில் மனித சங்கிலி

Posted January 31, 2016 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மகாத்மாகாந்தி நினைவு தினத்தையொட்டி மூத்த குடிமக்கள் இயக்கம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், வர்த்தக கழகம் ஆகிய இணைந்து மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி மாணவ–மாணவிகள் கைக்கோர்த்து மனித சங்கிலியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். இதில் தமிழ் இலக்கிய செயலாளர் ராஜ்மோகன், மூத்த குடிமக்கள் இயக்க தலைவர் சக்திவேல், செயலாளர் ராஜாராம், உதவி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


0 comment(s) to... “காந்தி நினைவு தினத்தையொட்டி முத்துப்பேட்டையில் மனித சங்கிலி”