அதிரை கடலில் இரட்டைமடி இழுத்த விசைப்படகுகளை மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்-பரபரப்பு-படங்கள் இணைப்பு

Posted January 19, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம், ஜன.19:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தொடர்ந்து இரட்டை மடி வலை களை பயன்படுத்திய விசைப்படகுகளை கரையூர் தெரு மீனவர்கள் பிடித்து மீன் துறையிடம் ஒப்படைத்தனர் தஞ்சை கடல் பகுதியில் தொடர்ந்து இரட்டை மடி வலை களை பயன் படுத்தி சில விசைப்படகுகள் பைபர் படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தி வந்தனர். இதனால் தஞ்சை துறை முகபகுதியில் உள்ள பைபர் படகு மீனவர்கள் ஒன்று சேர்ந்து இரட்டை மடி வலை களை இலுப் போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 6ம்தேதி அதிராம் பட்டினத்தில் சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர். இதை யடுத்து மீன் துறை உதவி இயக்குனர், கோட்டாட்சியர் ஆகியோர் மீன வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதிராம்பட்டினம்கடல் பகுதி யில் சிலவிசைப் படகுகள் இரட்டை மடி வலையை பயன்படுத்தி வந்த னர். இதனால் கரையூர் தெரு பைபர் படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்தன. இதனால் கரையூர் தெருகாந்திநகர், ஆறு முககிட்டங்கி தெரு ஆகிய துறைமுகங்களில் இருந்து 10க்கும் மேற் பட்ட படகுகளில் 200 மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்று இரட்டை மடி இலுத்துக் கொண்டிருந்த நான்கு விசைப் படகுகளையும், அதில் உள்ள 27 மீனவர்களையும் பிடித்து மீன் துறை மற்றும் கடலோர காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். மீன் துறைசார்
 ஆய்வாளர் கர்ணண் மற்றும் கட லோர பாதுகாப்பு காவல் நிலைய உதவி ஆய்வாலர் முத்துகுமார் ஆகி யோர் விசா ரணை நடத்தியதில், காரைக் கால் பகுதி விசைப் படகு கள் என்றும், அதில் சென்ற மீனவர் கள் நாகை மற்றும் காரைக் கால் பகுதி மீனவர்கள் என்றும் தெரிந்தது. இது தொடர்பாக மீன் துறை அலு வலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.















0 comment(s) to... “அதிரை கடலில் இரட்டைமடி இழுத்த விசைப்படகுகளை மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்-பரபரப்பு-படங்கள் இணைப்பு”