பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

Posted January 31, 2016 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலிபட்டுக்கோட்டை அருகே கோட்டைபட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் பாவாபக்ருதீன் (வயது 25).
சம்பவத்தன்று இவர், அதே ஊரை சேர்ந்த அசன் முகைதீன் (24) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பண்ணவயல்நசுவினி ஆற்றுபாலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாபக்ருதீன் இறந்தார். அசன் முகைதீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி”