பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
Posted January 31, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
சம்பவத்தன்று இவர், அதே ஊரை சேர்ந்த அசன் முகைதீன் (24) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பண்ணவயல்நசுவினி ஆற்றுபாலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாபக்ருதீன் இறந்தார். அசன் முகைதீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி”