உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம்
Posted January 29, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
புதுடெல்லி,
உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலை ‘வெல்த்–எக்ஸ்’ அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 87.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் கோடி) ஆகும்.
இந்த பட்டியலில் 3 இந்தியர்களும் இடம்பெற்று உள்ளனர். அதன்படி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 24.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சொத்துகளுடன் 27–வது இடத்தை பிடித்துள்ளார்.
விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி (16.5 பில்லியன் டாலர்) 43–வது இடத்தையும், சன் பார்மா அதிபர் திலிப் சங்வி (16.4 பில்லியன் டாலர்) 44–வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் அதிக அளவாக அமெரிக்கர்கள் 29 பேர் இடம் பெற்றுள்ளனர். சீனர்களை பொறுத்தவரை 4 பேர் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதில் மிகவும் இளவயது கோடீஸ்வரராக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் 8–வது இடத்தை பிடித்துள்ள இவரது சொத்து மதிப்பு 42.8 பில்லியன் டாலர் ஆகும்.
0 comment(s) to... “உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம்”