அதிரை அருகே விதை கிராம திட்டப் பயிற்சி முகாம்

Posted January 31, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) பயிர் வகைப் பயிர்களின் விதை கிராம திட்டப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.               
புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சித் தலைவர் வி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா முன்னிலை வகித்தார்.
இதில் தஞ்சாவூர் விதை அலுவலர் ராஜேந்திரன் பேசுகையில், விதை உற்பத்தி செய்யும் முறை, விதைப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகள், உளுந்து சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியன குறித்து விளக்கினார்.
தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ந. இளஞ்செழியன் பயிர்வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்கள், உளுந்து ரகங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
உதவி வேளாண் அலுவலர்கள் ஆர். ரீகன், சித்ரா, அட்மா திட்ட மேலாளர் சி. சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் வி. ரமேஷ், த. ரவி மற்றும் முன்னோடி விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.


0 comment(s) to... “அதிரை அருகே விதை கிராம திட்டப் பயிற்சி முகாம்”