மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

Posted December 10, 2015 by Adiraivanavil in Labels:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடுகள் அதிக அளவில் வளர்த்து வந்தார். மேலும் கால்நடைகளும் அவரிடம் உள்ளது. இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று நேற்று முன்தினம் இரவு குட்டி ஈன்றது.

ஒன்றன் பின் ஒன்றாக 4 குட்டிகளை ஆடு ஈன்றது. இந்த 4 ஆட்டுக்குட்டிகளில் 3 மட்டுமே ஆட்டுக் குட்டி போல் இருந்தது. மற்றொரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக இருந்தது. இதனால் அந்த ஆட்டுக்குட்டியை மின்விளக்கு வெளிச்சத்தில் வைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

மனித உருவில் இருந்தது

அந்த ஆட்டுக்குட்டியின் உடல் மற்றும் முகம் மனித உருவில் இருந்தது. கால்கள் மிகவும் சிறிய அளவிலே இருந்தது. இரவு பிறந்த ஆட்டுக்குட்டி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் அந்த மனித உருவில் இருந்த ஆட்டுக்குட்டி இறந்ததும் அதனுடன் பிறந்த மற்றொரு ஆட்டுக்குட்டியும் இறந்தது.

இந்நிலையில் மனித உருவில் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் காட்டுத் தீ போல் அந்த பகுதியில் பரவியது. இதை தொடர்ந்து சுற்றுவட்டாரங்களில் உள்ள மக்கள் வடக்கு இடையபட்டியில் திரண்டனர். அனைவரும் மனித உருவில் இருந்த ஆட்டுக்குட்டியை பார்த்து ஆச்சரியப்பட்டதுடன் பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் இறந்த ஆட்டுக்குட்டிகளை அருகில் உள்ள ஒரு இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். அதன் பின்னரும் அதிசய ஆட்டுக்குட்டி பற்றிய தகவல் அறிந்து அதிக அளவிலானோர் இதை காண வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மனித உருவில் ஆட்டுக்குட்டி பிறந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


0 comment(s) to... “மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி ”