பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்.
Posted December 06, 2015 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி டிசம்பர்-6
பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசியர் வீரம்மாள் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். குறிச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவானந்தம், பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு, சுகாதார கல்வி முறை, உடல்நலம், மனநலம், கை கழுவுதல் குறித்த நலக்கல்வி பயிற்சி வழங்கப்பட்டது.
முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வி.பிரதாப்சிங், எம்.கருப்பசாமி, சுகாதார செவிலியர், மருந்தாளுநர்கள் நிலவழகி, தமிழ்செல்வி, தனலட்சுமி, ஆசிரியைகள் ஜெயந்தி, குளோரி, சத்துணவு அமைப்பாளர் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவாக சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் நன்றி கூறினார்.
0 comment(s) to... “பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்.”