தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு-சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு
Posted October 15, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
சென்னை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வழக்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால், பண்டிகையை ஒட்டிய நாட்களில் ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். எனவே, பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் 29-ம் தேதி சிறப்பு ரெயில் (06026) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து 29-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 31-ம் தேதி சிறப்பு ரெயில் (06025) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 31-ம்தேதி காலை 9 மணியளவில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு திருச்சி சென்றடையும்.
எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06041) 29-ம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு 30-ம் தேதி சுவிதா சிறப்பு ரெயில் (82610) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 30-ம் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comment(s) to... “தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு-சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு”