அதிராம்பட்டினம் அருகே நசுவினி ஆற்றில்; உள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா ?
Posted September 10, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
காவேரி ஆற்றின் கடைமடை பகுதியான நசுவினி ஆறு பாசன வசதி உள்ள ஆறாகும். இந்த ஆற்றை பயன்படுத்தி முடுக்குக்காடு, கரிசைக்காடு பேய்க்காலிக்காடு மங்கனங்காடு கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமத்திற்கும் மேலாக இந்த ஆற்றை பயன்படுத்தி பாசன வசதி பெறுகின்றன. மேலும். இந்த ஆற்றில் தடுப்பணை கட்டி செட்டர் போட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவினி ஆற்றை விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்தியும், திருமண காலங்களில் புதுப்பெண், மாப்பிள்ளை குளிக்கவும், மேலும் பொது மக்கள் கிரி(கருமாதி)யைக்கும,; இந்த ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். இனி வருவது மழைக் காலம் என்பதால் இந்த ஆற்றின் நீரோற்றத்தை அடைத்துக்கொண்டு இருக்கின்ற கருவேல மரங்களை அகற்றினால் பொது மக்கள் சிரமம் இல்லாமல் இருப்பார்கள் .
அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவினி ஆற்றின் உள்ளே கருவேல மரங்கள் மண்டி கிடக்கும்போது எடுத்தப்படம்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே நசுவினி ஆற்றில்; உள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா ?”