திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த வெள்ளை நாகம் பிடிபட்டது
Posted September 25, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
திருவாரூர் அருகே அரிதான வெள்ளை நிற நாகம் பிடிபட்டது.வெள்ளை நிற நாகம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லாவூதீன். நேற்று இவருடைய வீட்டுக்குள் 8 அடி நீளம் கொண்ட அரிதான வெள்ளை நிற நாகம் புகுந்தது. இந்த நாகத்தை உயிருடன் பிடிக்க ஜெய்லாவுதீன் முடிவு செய்தார். எனவே நாகத்தை பிடிக்க சிவனடியார் மோகன் (வயது54) என்பவருக்கு தகவல் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மோகன், எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் லாவகமாக வெள்ளைநிற நாகத்தை பிடித்தார்.
இதுகுறித்து மோகன் கூறியதாவது:–
நான் சிவனடியார். கடந்த 30 ஆண்டுகளாக நாகங்களை பிடித்து வருகிறேன். வீடு, மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள நாகங்களை மட்டுமே பிடித்து வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதியில் விட்டு விடுவேன். இதுவரை 9,600 நாகங்களை பிடித்துள்ளேன். இதில் 9 நாகங்கள் என்னை கடித்துள்ளன.
தற்போது பிடிப்பட்ட 8 அடி நீளம் கொண்ட நாகம், வெள்ளை நாகம் இனத்தை சேர்ந்தது. இது கொடிய விஷத்தன்மை கொண்டது. இந்த இனத்தை சேர்ந்த நாகம் இந்தியாவிலேயே மிகவும் அரிதானது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comment(s) to... “திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த வெள்ளை நாகம் பிடிபட்டது”