பட்டுக்கோட்டை பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதால் -பயணிகள் அவதி

Posted September 20, 2016 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை, செப்.20:
பட்டுக்கோட்டை பஸ்நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசு வதாகவும், பஸ் நிலையத்தில் முழுமையாக சுகாதார பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற் கொள்ளவேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தினமும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்த படி செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில அரை மணி நேரம் மழை பெய் தாலே மழை நீர் தேங்கி நிற்கும். பஸ் ஸ்டாண்டில் உள்ள சாக் கடை வாய்க்காலும், பஸ் ஸ்டாண்டின் தரைதளமும் ஒரே மட்டத்தில் இருப்பதாலும், தெரு வோரங்களில் உள்ள சாக் கடை நீர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கலந்து விடுவதாலும் கொசுக்கள் பரவி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் உடனடியாக போர்க் கால அடிப்படையில் பஸ் ஸ்டாண்டை தூய்மைப்படுத்துவதற்கும், பஸ் ஸ்டாண்டில் மேலும் கூடுதலாக கட்டப்பட்டு வருகிற இலவச சிறுநீர் கழிப்பிடங்களை கட்டி முடித்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள சிறுநீர் கழிப்பிடங்களை தவிர பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்த வெளியில் பொது மக்கள் சிறு நீர் கழிக்காதவாறு தினசரி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்குள் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள கழிவு நீர் வாய்க்காலை ஆழப்படுத்தி, கழிவு நீர் தேங்காத வாறு சீரமைக்க வேண்டும். இது குறித்து தமிழ் நாடு தெய்வீக தமிழ்ப் புரட்சி பாசறை நிறுவனர் ஆதிமதன கோபால் கூறுகையில், பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் முழுமை யான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் முழுமையான சுகாதாரப் பணிகளை இது வரை மேற்கொள்ளவில்லை. கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள வடிகாலுக்கு வெளியே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பரவி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் சிறு நீர் கழிப்பிடம் போதிய அளவு இல்லாததால் பஸ் நிலையத்தினுள் திறந்த வெளியில் சிறு நீர் கழிக்கக்கூடிய அவல நிலை உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் வர உள்ளதால் நகராட்சி அதிகாரிகள் போர்க் கால அடிப்படையில் பஸ் ஸ்டாண்டில் முழு மையான சுகாதாரப்பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்றார்.




0 comment(s) to... “பட்டுக்கோட்டை பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதால் -பயணிகள் அவதி”