அதிரை கடற்பகுதியில் இரண்டாவது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை
Posted September 29, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் சாகர் ஹவாச் ஆப்ரேசன் ஒத்திகை நிகழ்வு இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கடற்பகுதியான தம்பிகோட்டையிலிருந்து கட்டுமாவடி வரைக்கும் தஞ்சை எஸ்பி மகேஸ் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி குமரவேல், இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ், மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர்கள் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் இடத்தில் காவல் துறையினர் படகில் சென்று சோதனை செய்தனர். அதை போல் அதிராம்பட்டினம் வெளிவயல் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் ஆகிய துறைமுகம் பகுதியில் தனிக்கை செய்தனர். தஞ்சை கிழக்கு கடற்கரை சாலையான தம்பிக்கோட்டை ராஜாமடம் சேதுபாவாசத்திரம் இரண்டாம்புளிகாடு போன்ற சோதனை சாவடிகளில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கீழத்தோட்டம் போன்ற பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் சோதனை செய்தனர்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை பயிற்சியை ஒட்டி தஞ்சை கடலோர பாதுகாப்பு போலீசார் கடலில் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர்.
0 comment(s) to... “அதிரை கடற்பகுதியில் இரண்டாவது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை”