
அதிராம்பட்னத்தில் மரத்தின் நடுவில் குலை தள்ளியுள்ள வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மீனவர் சங்க தலைவர் இவர் தனது தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். ஒரு வாழை மரத்தின் நடுவில் வாழைத்தார் விட்டுள்ளது. இந்த தாரில் வாழை சீப்புகள் உள்ளன. வாழை மரத்தின் நடுவில் தார் விட்டுள்ள செய்தி பரவியதால், ஏரிப்புறக்கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மரத்தின் நடுவில் குலை தள்ளியுள்ள வாழைத் தாரை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.