பட்டுக்கோட்டை அருகே மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர் கைது

Posted September 22, 2016 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அருகே மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர் கைது:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். கார் டிரைவர்.
இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகிறது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. விஜய் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்தோணியம்மாள் பக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த விஜய் அங்கு சென்ற மனைவியிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.
பின்னர் அங்கிருந்த மண்எண்ணையை மனைவி உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அந்தோணியம்மாளை மீட்டனர். பின்னர் அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
news by  maalaimalar


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர் கைது”