அதிரை அருகே சம்பைபட்டினம் சாலை சீரமைக்க கோரிக்கை

Posted September 22, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்;, செப்.22:
பேராவூரணியிலிருந்து சம்பைப்பட்டிணம் செல்லக்கூடிய சாலை சீர மைக்கப்பட வேண்டு மெனமார்க் சிஸ்ட்கம் யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி விடுத்துள்ள அறிக்கை:
பேராவூரணியிலிருந்து பூக்கொல்லை, முடச்சிக்காடு கலைஞர் நகர், சமத்துவபுரம், ஊமத்தநாடு, குப்பத்தேவன் வலசை, ஆலடிக்காடு வழியாக சம்பைப்பட்டிணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இணையக்கூடிய இணைப்பு சாலை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது தார் சாலை மறைந்து மண்சாலையாக மாறி,குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பேருந்துகளுக்கு பின்னால் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்ய முடியாத அவல நிலை உள்ளது. இந்த சாலை வழியாக தனியார் பள்ளிப் பேருந்துகள், நகரப் பேருந்துகள் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சாலை பராமரிப்பின்றி உள்ளதால் அரசு பேருந்துகள் பல நேரங்களில் இவ்வழியாக வருவதில்லை. இதனால் பள்ளி செல் லும் மாணவர்களும், பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



0 comment(s) to... “அதிரை அருகே சம்பைபட்டினம் சாலை சீரமைக்க கோரிக்கை”