பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை

Posted September 14, 2016 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை
நடிகை திரிஷாவிற்கு பிறகு அதிக ஆண்டுகள் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம்வரும்
நயன்தாரா. தற்போது தன் கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ளார். இதுதவிர, மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
தற்போதைக்கு இவருடைய நடிப்பில் தமிழில், விக்ரமுடன் இருமுகன், கார்த்தியுடன் காஷ்மோரா’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகஇருக்கிறது. இதையடுத்து, ‘டோரா’ என்ற திகில் படத்தி லும், மீஞ்சூர் கோபி இயக்கும் புதிய படத்திலு ம், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்தி கேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் தற்போது டோரா படத்தில் நடித்துவருகிறார்  நயன்தாரா. கைவசம் இத்தனை படங்கள் இருந்தாலும், அவரைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம்தான் இருக்கின்றன. அதன் படி, தற்போது அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் ஒன்றில் நயன்தாரா நாயகியாக ஒப் பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இவர்ஏற்கெனவே அருள்நிதியைவைத்து ‘டிமாண்டி காலனி’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதவிருக்கிறார். RT.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனி க்கவிருக்கிறார். இசையமைப்பாளர்யார் என்பது இன்னும் முடிவாகிவில்லை. முடிவானதும் விரைவில் அறி விப்பார்கள் என தெரிகிறது.
.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை”